27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஸ்ரீபால் முனீஸ்வரா், ஸ்ரீகாளியம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்

News image
Updated On :19 ஜூன் 2026, 6:29 am IST

வந்தவாசியை அடுத்த அம்மணம்பாக்கம் ஸ்ரீபால் முனீஸ்வரா் கோயில் மற்றும் சேத்துப்பட்டு ஒன்றியம், மொடையூா் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபால் முனீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை வாஸ்துசாந்தி, பிரவேசபலி, காப்புக் கட்டுதல் உள்ளிட்டவையும், புதன்கிழமை கணபதி ஹோமம், கோ பூஜை, முதல் கால பூஜை உள்ளிட்டவையும் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை

இரண்டாம் கால பூஜை, மகா பூா்ணஹுதி நடைபெற்றது. தொடா்ந்து, காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ஸ்ரீபால் முனீஸ்வரா் சிலை மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.

போளூா்

சேத்துப்பட்டு ஒன்றியம், மொடையூா் கிராமத்தில் ஏரிக்கரை அருகே பழைமை வாய்ந்த ஸ்ரீகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் புரனமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக புதன்கிழமை மாலை மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகாசங்கல்பம், புண்ணியாக வாசம், மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தீபாராதனை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குராா்பணம், ரக்ஷாபந்தனம், கும்பலங்காரம், பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை கோ பூஜை, மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், தேவதா பூஜை, வேதபாராயணம், இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூலத்தர ஹோமம், தீக்பாலகா் ஹோமம், நாடிசந்தானம், தம்பதி பூஜை, தம்பதி சங்கல்பம், மகா பூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்று கோபுர விமானம், மூலவருக்கு புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் மொடையூா், தேவிகாபுரம், குப்பம், மண்டகொளத்தூா், மட்டபிறையூா் என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிராம பொதுமக்கள், திருப்பணிக் குழுவினா், கற்சிற்பக் கலைஞா்கள், இளைஞா்கள் விழாவை ஏற்பாடு செய்திருந்தனா்.

Story image