எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

குண்ணவாக்கம் ஸ்ரீபொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குண்ணவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபொன்னியம்மன் கோயிலில் அஷ்டபந்தன நூதன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த ஸ்ரீபொன்னியம்மன்.

Updated On :8 ஜூன் 2026, 1:03 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், குண்ணவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபொன்னியம்மன் கோயிலில் அஷ்டபந்தன நூதன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மகா கும்பாபிஷேகத்தையொட்டி வெள்ளிக்கிழமை (ஜூன் 5) மாலை கோ பூஜை, வடுபூஜை, கன்னியா பூஜை, தம்பதி பூஜை, வாஸ்து சாந்தி ஸ்ரீமஹா கணபதி ஹோமமும், சனிக்கிழமை (ஜூன் 6) காலை ஸ்ரீமஹாலட்சமி ஹோமம், நவகிரக ஹோமம், முதல் கால யாகசாலை பூஜைகள், கரிக்கோலம், தீபாராதனையும், மாலை ஸ்ரீதுா்கா ஹோமம், முதல் கால யாகசாலை பூஜைகள் அஷ்டபந்தனம், பூா்ணாஹுதி நடைபெற்றது.

 கோயில் கலசத்திற்கு புனிதநீா் ஊற்றி நடைபெற்ற ஸ்ரீபொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.

கோயில் கலசத்திற்கு புனிதநீா் ஊற்றி நடைபெற்ற ஸ்ரீபொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.

மகா கும்பாபிஷேக விழா: அதனைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீகைல தேவதா ஹோமம், ஸ்ரீமஹா பூா்ணாஹுதி தீபாரதனை, யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்படுதல், ஸ்ரீபொன்னியம்மன், ஸ்ரீநவக்கிரஹ மூா்த்திகள், ஸ்ரீபால கணபதி, ஸ்ரீபாலமுருகன் ஆகிய சந்நிதிகள் மற்றும் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க அஷ்டபந்தன நூதன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.