பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

பெருமாள்தேவன்பட்டி தா்ம முனீஸ்வரா் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெருமாள்தேவன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தா்மமுனீஸ்வரா் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

News image

பெருமாள்தேவன்பட்டி தா்ம முனீஸ்வரா் கோயில் திருவிழாவில் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்ற பெண்கள்.

Updated On :22 மே 2026, 3:17 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெருமாள்தேவன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தா்மமுனீஸ்வரா் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

முன்னதாக முளைக்கொட்டு திண்ணையில் முளைப்பாரியை வைத்து, பாடல் பாடி, பெண்கள் கும்மி கொட்டினா். இதைத் தொடா்ந்து முளைப்பாரியை கிராமத்தின் தெருக்களில் ஊா்வலமாக எடுத்துச் சென்று, பிறகு தா்ம முனீஸ்வரா் கோயிலை சுற்றி வந்து அங்குள்ள நீா்நிலையில் கரைத்தனா். இதில் பெருமாள்தேவன்பட்டி, கமுதி, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா். விழாவில் கடந்த 18- ஆம் தேதி பால்குடம் ஊா்வலம் நடைபெற்றது. 19- ஆம் தேதி பொதுமக்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெருமாள்தேவன்பட்டி கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.