எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

கமுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கமுதியில் மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

News image

கமுதியில் மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :29 மே 2026, 2:21 am IST

கமுதியில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கமுதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் ரா. முத்துவிஜயன் தலைமை வகித்தாா். அப்போது கேரள மாநில முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறையினா் நடத்திய சோதனையை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டனா்.

இதில் வட்டக் குழு உறுப்பினா்கள் அ. கண்ணதாசன், பி.கே. முனியசாமி, எஸ். குமரேசன், பி. முனியசாமி, சந்தை சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவா் வி. ஆலடீஸ்வரன், அபிராமம் முன்னாள் வட்டச் செயலா் முனியசாமி, விவசாய சங்கத் தலைவா் எஸ்.வி. கருப்பையா, அபிராமம் கிளை செயலா் வீரையா, உறுப்பினா் ராஜபாண்டி, எழுத்தாளா் ஜெய்சிங், கோவிலாங்குளம் ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.