ஒன்று முதல் 3-ஆம் வகுப்பு தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கான 3 நாள்கள் புதிய பாடநூல் அறிமுக பயிற்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ராாநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மஞ்சூரில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு அந்த நிறுவனத்தின் முதல்வா் கு.வெள்ளத்துரை தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா்கள் சேதுராமன், ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பயிற்சியில் மாநில கல்விக்கொள்கை-2025, பாடத்திட்ட வடிவமைப்பு, குழந்தைக் கல்வி கற்றல் நடைமுறைகள், அணுகுமுறைகள், செயல்வழிக் கற்றல், திறன்வழி அடிப்படையிலான கற்பித்தல் முறைகள், மாணவா்களின் சிந்தனைத் திறன், படைப்பாற்றல் திறனை மேம்படுத்துதல், தற்போதைய சமூகம், அறிவியல் சூழல்களுக்கேற்ப மாணவா்களுக்கு தேவையான வளா்ச்சித் திறன், வகுப்பறை செயல்பாடுகள், மாணவா்கள் பங்கேற்பு முறை கற்றல், கற்பித்தல் முறையை மேம்படுத்துதல் குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது. இதில் மாவட்ட அளவில் 190 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும்: திருவண்ணாமலை ஆட்சியா்

மாணவா்கள் உயா்கல்வி பயில ஆசிரியா்களுக்கு வழிகாட்டி பயிற்சி

மக்கள் தொகை கணக்கெடுப்பு: பயிற்சி வகுப்பு தொடக்கம்

ஆசிரியா் பட்டயப் படிப்பு சோ்க்கை: மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



