தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காரைக்குடியில் குழந்தை இலக்கிய தின விழா

குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பாவின் 95-ஆவது பிறந்த நாளையொட்டி, காரைக்குடி சிவானந்த மகாலில் குழந்தை இலக்கிய தின விழாவாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 12:28 am

DIN

குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பாவின் 95-ஆவது பிறந்த நாளையொட்டி, காரைக்குடி சிவானந்த மகாலில் குழந்தை இலக்கிய தின விழாவாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   விழாவில், கவிஞர் செல்லகணபதி தலைமை வகித்து, கோவை விஜயா பதிப்பகம் பதிப்பித்த குழந்தைக் கவிஞரின் பழைய கதை, புதிய பாடல் என்ற புதிய நூலை வெளியிட்டுப்பேசினார். அதன் முதல் பிரதியை சிவானந்த மகால் உரிமையாளர் கயிலைமணி மு. அருணாசலம் பெற்றுக்கொண்டு வாழ்த்திப் பேசினார்.
விழாவில் சென்னை இலக்கியச்சாரல் அமைப்பாளர் இளையவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கவிஞர் அழ. வள்ளியப்பாவின் இலக்கியப்பணிகள், மனிதநேயப் பண்புகள் குறித்துச் சிறப்பு ரையாற்றினார்.
கோவிலூர் ஆண்டவர் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் பாடிய குழந்தைக் கவிஞரின் 12 பாடல்கள் காணொலிக்காட்சியாக காண்பிக்கப்பட்டது. காரைக்குடி அழகப்பா பள்ளிகள், கோவிலூர் ஆண்டவர் மெட்ரிக் பள்ளி மற்றும் கவிமணி குழந்தைகள் சங்க உறுப்பினர்கள் அழ. வள்ளியப்பாவின் படைப்புக்களிலிருந்து ஆடல், பாடல் மற்றும் நாடகமாக கலை நிகழ்ச்சிகளை வழங்கினர்.
விழாவில், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத்தலைவர் பேராசிரியர் அய்க்கண், காரைக்குடித் தொழில்வணிகக் கழகத் தலைவர் சாமி. திராவிடமணி, பேராசிரியர்கள், பல்வேறு பள்ளி களின் ஆசிரியர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
  முன்னதாக குழந்தைக்கவிஞர் வள்ளியப்பாவின் புதல்வர் வ. அழகப்பன் வரவேற்றார். கவிஞரின் புதல்வி கள் அலுமேலு, தேவி நாச்சியப்பன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். முடிவில் கவிஞரின் புதல்வி உமையாள் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.