சிவகங்கை மாவட்டம் பசியாபுரத்தில் அரசின் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடைபெற்ற இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழக அரசின் சிறப்பு செயலாக்கத் திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாவட்டத்தில் அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றன. மேலும்,இக்கண்காட்சியில் அரசின் திட்டங்கள் குறித்தும்,செயல்படுத்தக்கூடிய அரசு நலத் திட்டங்களை எவ்வாறு பெறுவது என்றும், யாரை அணுகி பெற வேண்டும் என்பது குறித்தும் பொது மக்களுக்கு அந்தந்த துறை அலுவலர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.