சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் கண்மாய் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் க.லதாவிடம் செவ்வாய்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
சங்கராபுரம் மக்கள் அளித்த மனு விவரம்: காரைக்குடி வட்டத்திற்கு உட்பட்டது சங்கராபுரம் ஊராட்சி. இங்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் கண்மாய் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்லல், தளக்காவூர், ஆலங்குடி, செவரக்கோட்டை ஆகிய பகுதிகளின் குடிநீர் தேவைக்காக சங்கராபுரம் கண்மாயில் ஆழ்துளை கிணறு
அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அவ்வாறு செய்தால் சங்கராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிவிடுவர். ஆகவே மாவட்ட நிர்வாகம் சங்கராபுரம் கண்மாய் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை நிறுத்த உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









