தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

காரைக்குடியில் ஒய்எம்சிஏ மண்டல மாநாடு

ஒய்எம்சிஏ-ன் மதுரை மண்டல மாநாடு காரைக்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2018, 1:37 am

DIN

ஒய்எம்சிஏ-ன் மதுரை மண்டல மாநாடு காரைக்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
ஒய்எம்சிஏ-ன் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டலத்துக்கு நடைபெற்ற இம்மாநாட்டில் ஒய்எம்சிஏ தென்பிராந்திய தலைவர் அசோகன்சாலமோன், செயலர் பால்சன்தாமஸ், மகளிர் மற்றும் இளைஞர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் நடை பெற்ற நிர்வாகிகள் தேர்தலில் காரைக்குடியைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் மண்டலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 நிகழ்ச்சியில், தென்னிந்திய திருச்சபை குருக்கள் கிங் சாமுவேல் சற்குணம், ஜெகதீஷ் கிருபாகரன், ஜேம்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்புப் பிரார்த்தனையும் நடைபெற்றது. முன்னதாக சிவகங்கை ஒய்எம்சிஏ தலைவர் சாமிதாஸ் வரவேற்றார். சிவகங்கை ஒய்எம்சிஏ செயலர் மனோகர் ஹென்றி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.