திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி தாலுகாக்களில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் இல்லாதததால் பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. எனவே சுற்றுச்சுவர் கட்டித்தர பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் வெளியில் சென்று வரும் நிலை உள்ளது. மேலும் பள்ளி வளாகத்திற்குள் மாடுகள் புகுந்து விடுவதால் மாணவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி வளாகத்தில் ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் புகுந்து விடுவதால் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்திற்குள் சமூக விரோதிகள் புகுந்து மது அருந்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். அதேபோல் சிங்கம்புணரி, எஸ்.புதூர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் பள்ளிக்குள் செல்லும் ஆடு மாடுகள் புத்தகங்களை சேதப்படுத்தி விடும் சூழலும் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அரசு பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆசிரியர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதிக்கு முன்னேறிய 4 அணிகள்!

தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி 3 மணிக்கு உரை!
கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸ் பட புரோமோ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

