சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், அரையிறுதிக்கு அத்லெடிகோ மாட்ரிட், ஆர்செனல், பிஎஸ்ஜி, பயர்ன் மியூனிக் ஆகிய நான்கு அணிகள் தேர்வாகியுள்ளன.
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், லிவர்பூல், ஸ்போர்டி எப்ஃசி ஆகிய அணிகள் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறின.
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் முக்கியமான கால்பந்து தொடராக சாம்பியன்ஸ் லீக் இருக்கிறது. இதில் அதிகமுறை கோப்பை வென்ற ரியல் மாட்ரிட் அணி நேற்றிரவு நடந்த போட்டியில் போராடி தோல்வியுற்றது.
நடப்பு சாம்பியனான பிஎஸ்ஜி லிவர்பூல் அணியை துவம்சம் செய்து, அபார வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த அரையிறுதிப் போட்டிகள் வரும் ஏப்.29, 30 மற்றும் மே.6, 7ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன.
அரையிறுதியில் அத்லெடிகோ மாட்ரிட் - ஆர்செனல் அணியுடனும் பயர்ன் மியூனிக் - பிஎஸ்ஜியுடனும் மோதுகின்றன. இறுதிப் போட்டி மே.30ஆம் தேதி ஒரேயொரு போட்டியாக நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.
Summary
Champions League: 4 Teams Advance to the Semifinals!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

44 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆஸ்டன் வில்லா!

அதிக கோல்கள் - அதிக க்ளீன் ஷீட் கொண்ட அணிகள் மோதும் இறுதிப் போட்டி..! யார் வெல்லுவார்கள்?

நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி இறுதிக்கு முன்னேற்றம்..! பயர்ன் மியூனிக் வெளியேற்றம்!







