நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி நிறைவு விழா

சிவகங்கை அருகே உள்ள இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் ஓராண்டு (2017-18) பயிற்சி நிறைவு செய்த வீரர்களை, நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அனுப்பி வைக்கும் விழா

News image
Updated On :14 மே 2018, 6:17 pm

DIN

சிவகங்கை அருகே உள்ள இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் ஓராண்டு (2017-18) பயிற்சி நிறைவு செய்த வீரர்களை, நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அனுப்பி வைக்கும் விழா மற்றும் வீரர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
சிவகங்கை மாவட்டம், இலுப்பகுடியில் கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில், எல்லை பாதுகாப்புப் படைக்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் ஓராண்டு பயிற்சி பெற்றுச் செல்வது வழக்கம். இதுவரை சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சியை நிறைவு செய்து, பல்வேறு மாநில எல்லைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இங்கு கடந்த ஆண்டு (2017-2018) பயிற்சி பெற்ற 326 வீரர்களை நாட்டின் பாதுகாப்புப் படைக்கு அனுப்பி வைக்கும் விழாவுக்கு, இலுப்பகுடி பயிற்சி மையத்தின் டி.ஐ.ஜி. ஆஸ்டின் ஈப்பன் தலைமை வகித்தார்.
இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஐ.ஜி. புனித் ரஸ்தோகி, பயிற்சி மற்றும் சாகச நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கினார்.
தொடர்ந்து, இந்திய தேசியக் கொடியை முன்னிறுத்தி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழாவில் முன்னதாக, இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் ஐ.ஜி. புனித் ரஸ்தோகி மற்றும் டி.ஐ.ஜி. ஆஸ்டின் ஈப்பன் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்றவாறு, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, வீரர்கள் கராத்தே, கயிறு ஏறுதல், துப்பாக்கி சுடுதல், நடனம் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்தனர்.
இதில், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.