சிவகங்கை அருகே பூட்டியிருந்த வீட்டில் வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் இறந்து கிடந்தார்.
சிவகங்கை அருகே ஆக்ஸ்வார்டு நகரைச் சேர்ந்தவர் ராஜா (52). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் வெகு நேரமாகியும் இவரது வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. எனவே, அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த சிவகங்கை நகர் போலீஸார் வீட்டைத் திறந்த பார்த்தபோது, உடலில் வெட்டுக் காயங்களுடன் ராஜா இறந்து கிடப்பது தெரியவந்தது. உடனே, அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அந்த வீட்டில் ஆய்வு நடத்தினர். வீட்டில் நகை, பணத்தை திருட முயன்றபோது இந்த சம்பவம் நடைபெற்றதா அல்லது ரியல் எஸ்டேட் தொழிலில் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில், சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கா் சிலைக்கு மரியாதை

மீன்பிடி தடைக்காலம் இன்று தொடக்கம்

ராமநாதபுரத்தில் ரூ.1.36 லட்சம் பறிமுதல்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

