சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முனியப்ப சுவாமி கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மண்டலாபிஷேக விழாவும், திங்கள்கிழமை கிடா வெட்டு படையல் வழிபாடும் நடைபெற்றது.
இக் கோயிலில் 48 நாள்களுக்கு முன் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில், கலசங்களில் நீர் நிரப்பி யாகம் வளர்க்கப்பட்டது. அதன்பின்னர், பூர்ணாஹூதி முடிந்து சூலாயுத வடிவிலான முனியப்ப சுவாமிக்கு கலசநீரால் அபிஷேகம் நடத்தி, அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. இவ் விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், கோயிலில் கிடா வெட்டி சுவாமிக்கு படையலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. மதியம், கோயிலில் அசைவ அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேடிஎம் நிறுவனம் இனி இந்தியா்களின் வசம்: உள்நாட்டு முதலீட்டாளா்களிடம் 50.3% பங்குகள்

இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் கொள்கையில் மாற்றமில்லை - சீனா அறிவிப்பு

மாற்றத்துக்கான நேரம்

இரண்டாவது இடத்துக்குத்தான் எதிர்க்கட்சிகள் போட்டி! - முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி சிறப்பு நேர்காணல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

