மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கதர் வாரியத்தில் ரூ.10 கோடியில் பட்டுப் புடவைகள் தயாரிக்க இலக்கு: அமைச்சர்

கதர் வாரியத்தின் மூலம் தயாரிக்கப்படும் பட்டுப்புடவைகளுக்கு பெண்களிடம் வரவேற்பு உள்ளதால் நடப்பு நிதியாண்டில் (2018-19) உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் 500 பட்டு நெசவாளர்களை

Updated On :21 மே 2018, 6:24 pm

கதர் வாரியத்தின் மூலம் தயாரிக்கப்படும் பட்டுப்புடவைகளுக்கு பெண்களிடம் வரவேற்பு உள்ளதால் நடப்பு நிதியாண்டில் (2018-19) உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் 500 பட்டு நெசவாளர்களை கூடுதலாகச் சேர்த்து ரூ. 10 கோடி மதிப்புள்ள பட்டுப்புடவைகள் தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத்தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி. பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அம்மன் சன்னதி வீதியில் கதர் மற்றும் கிராமத்தொழில்கள் வாரியத்துறையின் மூலம் காதி கிராப்ட் பட்டு எம்போரியம் விற்பனை மையத்தை திங்கள்கிழமை திறந்து வைத்து அமைச்சர் கூறியது: கதர் வாரியத்தின் மூலம் கடந்த நிதியாண்டில் (2017-18) ரூ.5 கோடியே 3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் கதர்வாரியத்தின் மூலம் பட்டுப்புடவைகள் தயாரிக்கப்பட்டு விற்பனையில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் (2018 - 19) உற்பத்தித் திறனை அதிகரித்திடும் வகையில் 500 பட்டு நெசவாளர்களை கூடுதலாகச் சேர்த்து ரூ. 10 கோடி மதிப்புள்ள பட்டுப்புடவைகள் தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கதர் கிராமத்தொழில்கள் வாரியத்துறையின் மூலம் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு 30 சதவீதம் தள்ளுபடியும், ஜி.எஸ்.டி வரி நீக்கப்பட்டும் விற்பனை செய்யப்படுகிறது. காரைக்குடியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் புதிதாக மேம்படுத்தப்பட்ட காதி கிராப்ட் பட்டு எம்போரியம் விற்பனை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு ரூ. 40 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
பின்னர் காரைக்குடி அருகே கண்டனூர் கதர் வளாகத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான புதிய திரவ சோப்பு நிறுவனத்தை அமைச்சர் தொடக்கி வைத்தார். அமைச்சருடன் கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் சி. நடராஜன், மாவட்ட ஆட்சியர் க. லதா, சிவகங்கை எம்.பி பி.ஆர். செந்தில்நாதன், கதர் கிராமத்தொழில் வாரியத் துறை மண்டல துணை இயக்குநர் அருணாசலம், உதவி இயக்குநர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.