சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி அலர்மேல்மங்கை உடனுறை திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழக இந்துசமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழுள்ள இக்கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா 15 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா தொடக்கமாக திங்கள்கிழமை நண்பகலில் கொடியேற்றம் நடைபெற்றது. அதையொட்டி, சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
விழாவின், முதல் நாளில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவியுடன் சுவாமி சிறப்புஅலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில், அம்சவாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 29-ஆம் தேதி மாலையிலும், தெப்ப உற்சவம் ஜூன் 1- ஆம் தேதியும் நடைபெறுகிறது.
கொடியேற்ற நிகழ்ச்சியில், அறங்காவலர் குழுத் தலைவர் நா. சீனிவாசன் செட்டியார், கோயில் செயல் அலுவலர் து. பாலதண்டாயுதம் மற்றும் விழாக் குழுவினர், பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாட்டியாலா சரக்கு ரயில் பாதை வெடி வைத்து தகர்க்க முயற்சி: மேலும் ஒருவர் கைது

ஸ்வாகதா தன் போராட்டத்தில் வெல்லட்டும்: ஜேம்ஸ் வசந்தன்

ஃபினிஷர் ரோல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது: அஷுத்தோஷ் சர்மா
கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

