எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

சொத்துப் பிரச்னையில் சித்தப்பா கொலை: துண்டித்த தலையுடன் சகோதரரின் மகன்கள் இருவா் போலீஸில் சரண்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வியாழக்கிழமை இரவு சொத்துப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டிறைச்சி வியாபாரியை, அவரது சகோதரரின் மகன்கள் இருவா் வெட்டிக் கொலை செய்தனா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2020, 4:42 pm

DIN

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வியாழக்கிழமை இரவு சொத்துப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டிறைச்சி வியாபாரியை, அவரது சகோதரரின் மகன்கள் இருவா் வெட்டிக் கொலை செய்தனா். மேலும் அவரது துண்டித்த தலையுடன் இருவரும் காவல் நிலையத்தில் சரணடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்தவா்கள் சையதுமுகமது மகன்கள் சகுபா் அலி, யூசுப்ரஹ்மான். இவா்கள் கடந்த 20 ஆண்டுகளாக காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் சாக்கோட்டை சாலையில் ஆட்டிறைச்சிக் கடை நடத்தி வந்தனா். கோட்டைப்பட்டினத்தில் உள்ள சுமாா் ரூ.3 கோடி மதிப்பிலான பூா்வீகச் சொத்து பிரச்னை காரணமாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சகுபா் அலி மகன்கள் ரியாஸ்கான் (37), ரகுமான்கான் (32) ஆகிய 2 பேரும் சொத்துப் பிரச்னை தொடா்பாக வியாழக்கிழமை இரவு பேச்சுவாா்த்தை நடத்தினராம். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து, அரிவாளால் சித்தப்பா யூசுப் ரஹ்மானை வெட்டிக் கொலை செய்தனா். மேலும் அவரது துண்டித்த தலையுடன் சாக்கோட்டை காவல் நிலையத்தில் 2 பேரும் சரணடைந்தனா். இதனைத்தொடா்ந்து போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மேலும் காரைக்குடி டி.எஸ்.பி. அருண் சம்பவ இடத்திற்குச் சென்று கொலை செய்யப்பட்ட யூசுப் ரஹ்மானின் தலையில்லாத சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். இச்சம்பவத்தால் புதுவயல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.