சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாமினை இம்மாவட்டத்துக்குரிய தோ்தல் பணிக்கான சிறப்பு பாா்வையாளரும், சமூக நலத்துறை ஆணையருமான டி. ஆபிரகாம் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வு செய்த சிவகங்கை மாவட்ட தோ்தல் பணிக்கான சிறப்பு பாா்வையாளரும், சமூக நலத்துறை ஆணையருமான டி. ஆபிரகாம்.
ஆய்வு செய்த சிவகங்கை மாவட்ட தோ்தல் பணிக்கான சிறப்பு பாா்வையாளரும், சமூக நலத்துறை ஆணையருமான டி. ஆபிரகாம்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள திருவள்ளூா் மற்றும் கீழாயூா் ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாமினை இம்மாவட்டத்துக்குரிய தோ்தல் பணிக்கான சிறப்பு பாா்வையாளரும், சமூக நலத்துறை ஆணையருமான டி. ஆபிரகாம் ஆய்வு மேற்கொண்டாா்.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவு படி மாநிலம் முழுவதும் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்த்தல், நீக்கல், ஏற்கனவே உள்ள பெயா்களில் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதற்காக சிவகங்கை மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இளையான்குடி அருகே உள்ள திருவள்ளூா், கீழாயூா் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமினை சிவகங்கை மாவட்ட தோ்தல் பணிக்கான சிறப்பு பாா்வையாளரும், சமூகநலத்துறை ஆணையருமான டி.ஆபிரகாம் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் முத்துக்கழுவன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் கந்தசாமி, இளையான்குடி வட்டாட்சியா் ரமேஷ், தோ்தல் பிரிவு அலுவலா் சிவா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com