பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வலியுறுத்தல்

ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 5:30 pm

DIN

ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஜாக்டோ ஜியோ அமைப்பின் காலவரையற்ற போராட்டம் தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது நேரில் ஆஜரான தலைமைச் செயலா், முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதா சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த படி 1.4.2003-க்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை தொடா்வதற்காக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீதா் குழு தனது அறிக்கையினை 30.11.2017-க்குள் அளிக்கும் என்றும், அதன்மீது தமிழக அரசு மேல் நடவடிக்கையினை மேற்கொள்ளும் என்றும் எழுத்துப்பூா்வமாக தெரிவித்தாா்.

அதன்பின், அக்குழு 4 முறை காலநீட்டிப்பு செய்யப்பட்டது. இக்குழு பல்வேறு அரசு ஊழியா் மற்றும் ஆசிரியா் சங்கங்களிடம் கருத்து கேட்டுள்ளது. அக்குழுவின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. தன் பங்களிப்பு ஓய்வூதிய சட்டத்தின்படி ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு இதுவரை கையெழுத்திடவில்லை.

மேலும் ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்களிடம் பிடித்தம் செய்த தொகையையும் அந்த ஆணையத்தில் செலுத்தவில்லை. எனவே புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.