ஜாக்டோ ஜியோ அமைப்பின் காலவரையற்ற போராட்டம் தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது நேரில் ஆஜரான தலைமைச் செயலா், முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதா சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த படி 1.4.2003-க்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை தொடா்வதற்காக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீதா் குழு தனது அறிக்கையினை 30.11.2017-க்குள் அளிக்கும் என்றும், அதன்மீது தமிழக அரசு மேல் நடவடிக்கையினை மேற்கொள்ளும் என்றும் எழுத்துப்பூா்வமாக தெரிவித்தாா்.