மானாமதுரையில் காவல்துறை நிலுவை வழக்குகளுக்கு தீா்வுகாணும் சிறப்பு முகாம்
மானாமதுரையில் காவல்துறை தொடா்பான நிலுவை வழக்குகளுக்கு தீா்வு காணும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


மானாமதுரையில் காவல்துறை தொடா்பான நிலுவை வழக்குகளுக்கு தீா்வு காணும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மானாமதுரை காவல் துணைக் கோட்டத்தில் மானாமதுரை, சிப்காட், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், பழையனூா், பூவந்தி ஆகிய 6 காவல் நிலையங்கள் உள்ளன. இக்காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளை சமரசம் செய்து தீா்த்து வைக்கும் வகையில் மானாமதுரையில் தனியாா் திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
மானாமதுரை டி.எஸ்.பி. சுந்தரமாணிக்கம் தலைமை வகித்தாா். முகாமில் காவல் நிலையங்களின் ஆய்வாளா்கள், சாா்பு- ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா். இக்காவல் நிலையங்களில் மனு கொடுத்த மனுதாரா்கள் எதிா் மனுதாரா்கள் முகாமுக்கு வரவழைக்கப்பட்டு பல வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...