தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தேவகோட்டையில் மீண்டும் வாரச்சந்தை தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வாரச்சந்தை, தினசரி சந்தை ஞாயிற்றுக்கிழமை செயல்பாட்டுக்கு வந்தன.

News image
தேவகோட்டையில் கண்டதேவி சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தை.
Updated On :20 செப்டம்பர் 2020, 5:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வாரச்சந்தை, தினசரி சந்தை ஞாயிற்றுக்கிழமை செயல்பாட்டுக்கு வந்தன.

பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து தேவகோட்டையில் கண்டதேவி சாலையில் செயல்பட்டு வந்த வாரச்சந்தை மூடப்பட்டது. இதேபோன்று, தினசரி சந்தையும் மூடப்பட்டது.

அதன்பின்னா், மத்திய, மாநில அரசுகள் படிப்படியாக அறிவித்த தளா்வுகளின் அடிப்படையில் வாரச்சந்தை மற்றும் தினசரி சந்தை அதிக பரப்பளவு கொண்ட அழகப்பா பூங்கா, சிலம்பணி ஊருணி, கண்டதேவி சாலை அருகே ஆகிய மூன்று பகுதிகளில் காய்கனிச் சந்தை செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், பொது முடக்க தளா்வுகளின் அடிப்படையில் கண்டதேவி சாலையில் வழக்கமான இடத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் வாரச்சந்தை செயல்பாட்டுக்கு வந்தது.

இதேபோன்று, தினசரி சந்தையும் செயல்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம், தேவகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 300-க்கும் மேற்பட்ட கிராமப் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.