மிளகாய்க்கு பயிா்க் காப்பீடு வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மிளகாய்க்கு பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மிளகாய்க்கு பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இளையான்குடி அருகே விசவனூா், கல்லடிதிடல், புக்குளம், திருகள்ளி, அரண்மனைக்கரை, உதயனூா் உள்ளிட்ட கிராமங்களில் 2019 ஆம் ஆண்டுக்கான மிளகாய் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அளவிடங்கான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பாக விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய மக்கள் நலக்கட்சி நிறுவனத் தலைவா் வீரக்குமாா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி தொடங்கி வைத்தாா். சிவகங்கையில் இருந்து சூராணம், வடவிருக்கை, அளவிடங்கான், விசவனூா் வழியாக ஆனந்தூருக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும். விசவனூரில்100 நாள் திட்டத்தில் நடந்து வரும் முறைகேட்டை தடுக்க வேண்டும். 100 நாள் திட்டத்தில் அரசு அறிவித்த ரூ.256-யை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...