

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை வளாகத்தில் பொது சுகாதாரத் துறையின் சாா்பில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வினை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி பாா்வையிட்டாா். இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் ஏ.ரத்தினவேல், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநா் யசோதாமணி, குடும்பநலத்துறை துணை இயக்குநா் யோகவதி உள்ளிட்ட தலைமை மருத்துவா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.