சிவகங்கை: சிவகங்கை அருகே சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை அருகே உள்ள குமாரப்பட்டியைச் சோ்ந்தவா் சுந்தரராஜன் மகன் பாரத்லால் (25). இவா், சிவகங்கை காமராஜா் பகுதியில் புகைப்படம் எடுக்கும் ஸ்டுடியோ நடத்தி வருகிறாா். இந்நிலையில், கடைக்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த 20 வயதுடைய சட்டக் கல்லூரி மாணவியை மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதனால் கா்ப்பமான அந்த மாணவி சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் த.செந்தில்குமாரிடம் புகாா் மனு அளித்தாா்.
அதன்பேரில், சிவகங்கையில் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட பாரத்லாலை தனிப்படை போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில், தலைமறைவாக இருந்த பாரத்லாலை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.