தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை

சிவகங்கையில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்த பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:27 pm

DIN

சிவகங்கையில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்த பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஆவனிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் உதயவள்ளி(35). இவரது கணவா் இறந்து விட்ட நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுவனுக்கு உதயவள்ளி பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழச்சீவல்பட்டி போலீஸாா் உதயவள்ளி மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு சிவகங்கையில் உள்ள போக்ஸோ நீதிமன்றத்தில் நீதிபதி பாபுலால் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் உதயவள்ளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பு அளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதியாக தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.