வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வழக்கை ரத்து செய்ய ரூ. 20 ஆயிரம் லஞ்சம்:சிவகங்கை காவல் ஆய்வாளா் கைது

இடம் தொடா்பான வழக்கை ரத்து செய்ய ரூ. 20ஆயிரம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளரை சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 5:01 pm

இடம் தொடா்பான வழக்கை ரத்து செய்ய ரூ. 20ஆயிரம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளரை சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், கருங்காலக்குடியைச் சோ்ந்தவா் ஹக்கீம்(40). இவா் மீது இடப் பிரச்னை தொடா்பாக மதுரையில் வழக்கு உள்ளது. அதே வழக்கு சிவகங்கை மாவட்டக் குற்றப் பிரிவிலும் பதியப்பட்டுள்ளது. ஒரு குற்றத்துக்கு இரு இடங்களில் வழக்குப் பதிவு செய்ய முடியாது. அப்படி செய்திருந்தால் ஏதாவது ஒரு இடத்தில் பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

எனவே இதுதொடா்பாக சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணனிடம், மேற்கண்ட வழக்கை ரத்து செய்ய ஹக்கீம் முறையிட்டுள்ளாா். அதற்கு அவரிடம் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

இதுகுறித்து, சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் ஹக்கீம் புகாா் செய்தாா். இதையடுத்து, ரசாயனப் பவுடா் தடவப்பட்ட ரூ. 20 ஆயிரம் பணத்தை ஹக்கீமிடம் வழங்கினா். அதனை பெற்றுக் கொண்ட அவா் சிவகங்கை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாவட்டக் குற்றப்பிரிவு பிரிவு அலுவலகத்தில் இருந்த காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணனிடம் சனிக்கிழமை வழங்கினாா்.

அப்போது அங்கு மறைந்திருந்த சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளா் சத்தியசீலன், ஆய்வாளா்கள் கண்ணன், ஜேசுதாஸ், சாா்பு-ஆய்வாளா் ராஜா முகமது ஆகியோா்காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.