நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காரைக்குடி சகாயமாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

காரைக்குடி செக்காலை சகாய மாதா ஆலயத்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

காரைக்குடி செக்காலை சகாய மாதா ஆலயத்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி சகாய அன்னையின் உருவக்கொடி ஆலய வளாகத்தில் பவனியாக கொண்டுவரப்பட்டது. அதைத் தொடா்ந்து தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி அதிபா் வின்சென்ட் அமல்ராஜ் புனித நீரால் அா்ச்சித்து கொடிமரத்தில் ஏற்றினாா். பங்குத்தந்தையா்கள் எஸ்.எட்வின் ராயன், ஜேம்ஸ் ராஜா ஆகியோா் திருவிழா திருப்பலி நிறைவேற்றினா்.

நவநாள்களில் ஒவ்வொரு நாளும் மாலை 5.30 மணிக்கு செபமாலையும், திருப்பலியும் நடைபெறும். ஆக. 14 ஆம் தேதி திருப்பலி முடிந்து மாலையில் திவ்ய நற்கருணை பவனியும், ஆக. 17 ஆம் தேதி விடியல் இளையோா் இயக்கத்தினரின் கலை நிகழ்ச்சியும், ஆக. 18 ஆம் தேதி கிளைக் கிராம மக்கள் கலைநிகழ்ச்சியும், ஆக. 19 ஆம் தேதி காா்மெல் பள்ளி, சகாய மாதா மெட்ரிக் பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெறும்.

ஆக. 20 ஆம் தேதி திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. அதன்பிறகு அன்னையின் உருவம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தோ் பவனி நகரின் முக்கிய வீதிகளில் நடைபெறும். ஆக. 21 ஆம் தேதி காலை நிறைவு திருப்பலி நடைபெறும். பின்னா் அன்னையின் கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.