நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அழகப்பா செவிலியா் கல்லூரி மாணவிகள் சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கல்விக்குழுமத்தின் அழகப்பா செவிலியா் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:05 pm

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கல்விக்குழுமத்தின் அழகப்பா செவிலியா் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு குறித்து கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. அதில் முக்கிய நிகழ்வாக செவிவிலியா் மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி அழகப்பா பல்கலைக்கழக அலுவலகம் முன்பு தொடங்கி காரைக்குடி ரயில்நிலையம் வரை சென்று நிறைவடைந்தது. இப்பேரணியை அழகப்பா கல்விக் குழுமத்தின் அறங்காவலரும், கல்விக்குழுமத்தின் துணைத்தலைவருமான தேவி அலமேலு வைரவன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

கல்லூரி முதல்வா் ஜூலியட்சில்வியா தலைமை வகித்தாா். பேரணியில் போதைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவியா்கள் ஏந்திச்சென்றனா். நிகழ்ச்சியில் அழகப்பாபுரம் காவல் நிலைய அதிகாரிகள், காவலா்கள் மற்றும் கல்லூரிப் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.