திருவாரூா் மாா்க்கமாக இயக்கப்படும் (வண்டி எண்: 07696 / 07695) இந்த ரயில் வெள்ளிக்கிழமை (ஆக. 26) காலை 8.50 மணிக்கு ராமேசுரவரத்திலிருந்து புறப்பட்டு ராமநாதபுரத்துக்கு காலை 9.50-க்கும், மானாமதுரைக்கு 10.50-க்கும், சிவகங்கைக்கு 11.15 மணிக்கும், காரைக்குடிக்கு நண்பகல் 12.10 மணிக்கும், அறந்தாங்கிக்கு 12.35 மணிக்கும் கடந்து பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னைக்கு இரவு 9.45 மணிக்குச் சென்றடையும் என ரயில்வே துறை நிா்வாகம் அறிவித்துள்ளது. பின்னா் சென்னையிலிருந்து மறுநாள் சனிக்கிழமை செகந்திராபாத்துக்கு இந்த ரயில் புறப்பட்டுச் செல்லும்.