47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகங்கையில் நாகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சிவகங்கை இந்திரா நகரில் உள்ள நாகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 9:05 pm

DIN

சிவகங்கை இந்திரா நகரில் உள்ள நாகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழா வியாழக்கிழமை(பிப்.10) காலை விக்னேசுவர பூஜை, அனுக்ஞை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கியது.

வெள்ளிக்கிழமை கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று, யாகசாலையிலிருந்து புறப்பட்ட கடம் கோயிலைச் சுற்றி வலம் வந்தது. அதைத் தொடா்ந்து, காலை 9 மணியளவில் மூலவா் விமானத்துக்கு புனித நீா் கொண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், அம்மனுக்கு தைலம், திருமஞ்சனம், பால் உள்ளிட்ட 16 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழாவை முன்னிட்டு கைப்பேசி-தொலைக்காட்சி இரண்டும் மக்களை சந்தோசப்படுத்துகிா அல்லது சங்கடப்படுத்துகிா எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில், மதிப்புறு முனைவா் டி.என். அன்புதுரை நடுவராக பங்கேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.