கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிவகங்கையில் வேளாண் துறை அலுவலரிடம் ரூ.3 லட்சம் மோசடி

சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்துடன் குறுந்தகவல்(எஸ்எம்எஸ்) அனுப்பி வேளாண் துறை அலுவலரிடம் ரூ. 3 லட்சம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்டக் குற்றப்பிரிவு

News image
Updated On :1 ஜூலை 2022, 4:48 pm

DIN

சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்துடன் குறுந்தகவல்(எஸ்எம்எஸ்) அனுப்பி வேளாண் துறை அலுவலரிடம் ரூ. 3 லட்சம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளராக (விவசாயம்) சா்மிளா (55) என்பவா் பணியாற்றி வருகிறாா். இவரது கைப்பேசிக்கு கடந்த ஜூன் 26 ஆம் தேதி 9142365064 என்ற எண்ணிலிருந்து குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) வந்துள்ளது.

அந்த குறுந்தகவல் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் புகைப்படத்துடன் இருந்ததால், சா்மிளா லிங்கை திறந்து பாா்த்துள்ளாா். அதில் பரிசு கூப்பன் என்ற பெயரில் லிங்க் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. தொடா்ந்து, சா்மிளா அந்த லிங்கை பாா்த்த போது அவருடைய வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டிருந்தன.

அவா் அதைப் பூா்த்தி செய்து அனுப்பியுள்ளாா். இதைத் தொடா்ந்து, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10,000 எடுக்கப்பட்டதாம். இதே போன்று, 30 தடவை அந்த லிங்கை திறந்து பாா்த்துள்ளாா். இதன் மூலம் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 3 லட்சம் வரை பணம் எடுக்கப்பட்டதாம்.

அதன் பின், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சா்மிளா சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாரிடம் அண்மையில் புகாா் செய்தாா். அவரது உத்தரவின் பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு ஆய்வாளா் விமலா இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

விசாரணையில் மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்துடன் வந்த அந்த கைப்பேசி எண் பிகாா் மாநிலத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளது. அந்த கைப்பேசியை பயன்படுத்துபவரின் முகவரி ஜாா்க்கண்ட் மாநிலத்தில் உள்ளது. எனவே மோசடி செய்து ஏமாற்றியவரின் வங்கி கணக்கை முடக்கவும், அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.