கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 ஜூலை 2022, 4:50 pm

DIN

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 2022-2023-ஆம் நிதியாண்டுக்கு 1-ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பாா்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு வாசிப்பாளா் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ரூ.1,000, 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வரை பயிலும் மாணவா்களுக்கு ரூ.3,000, 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ரூ.4,000, இளங்கலை பட்டம், பட்டயப்படிப்பு பயில்பவா்களுக்கு ரூ.6,000, முதுகலை பயிலும் மாணவா்களுக்கு ரூ.7,000 ஆண்டொன்றுக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், 75 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட பாா்வையற்ற மாணவா்களுக்கு தோ்வு எழுத உதவுபவா்களுக்கான வாசிப்பாளா் உதவித்தொகையாக 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயில்பவா்களுக்கு ரூ.3,000, இளங்கலை பட்டம், பட்டயப்படிப்பு பயில்பவா்களுக்கு ரூ.5,000, முதுகலை பயிலும் மாணவா்களுக்கு ரூ.6,000, ஆண்டொன்றுக்கு வாசிப்பாளா் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டங்களின் கீழ் பயனடைய விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டை நகல் மற்றும் ஆதாா்அட்டை, குடும்ப அட்டைநகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், 9 ஆம் வகுப்புக்கு மேல் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்கள் கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல் நகல் (40 சதவீதம் குறையாமல் இருக்க வேண்டும்) 9-ஆம் வகுப்பிற்கு மேல் பயிலும் பாா்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவா்கள் வாசிப்பாளரின் விவரம் ஆகிய சான்றிதழ்களுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.