புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காரைக்குடியில் வீட்டின் ஜன்னலை உடைத்து 40 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி, ரூ. 50 ஆயிரம் திருட்டு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீட்டின் ஜன்னலை உடைத்து 40 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளிப்பொருள்கள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது புதன்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :7 ஜூலை 2022, 5:52 pm

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீட்டின் ஜன்னலை உடைத்து 40 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளிப்பொருள்கள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது புதன்கிழமை தெரியவந்தது.

காரைக்குடி பா்மா காலனி கற்பக விநாயகா் நகரைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அலுவலா் மோகன். இவரும், இவரது மகன் ஆனந்தகுமாரும் வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு தூங்கியுள்ளனா். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டில் பீரோக்கள் வைத்திருக்கும் அறையின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் அந்த அறையை உள்பக்கமாக பூட்டியுள்ளனா். பின்னா் பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகள், 1 வைர மோதிரம், 1 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனராம்.

இந்நிலையில் புதன்கிழமை காலையில் அந்த அறையின் கதவை திறக்க முடியாததால் மகன் ஆனந்தகுமாா் அருகே சகோதரி வீட்டிற்கு சென்று திரும்பிய தனது தாயாரிடம் அதனைத் திறக்குமாறு கூறினாராம். அப்போது தான் அறைக்கதவை பூட்டவில்லை என்று தாயாா் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அறையின் பின்பக்க ஜன்னல் பகுதியை பாா்த்தபோது ஜன்னலை உடைத்து மா்ம நபா்கள் நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.