கடந்த 2020 மாா்ச் முதல் 2021 ஜூலை வரை கரோனா தடுப்பு நடவடிக்கையின் போது ரூ. ஒரு கோடியே 20 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும், இதில் முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் இரா. சோனைமுத்து புகாா் அளித்தாா். அதன் பேரில் சென்னையில் உள்ள தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் விசாரணை நடத்தியது. முறைமன்ற நடுவா் மு.மாலிக் பெரோஸ் கான் முன்னிலையில் கடந்த மே 17 ஆம் தேதி சோனை முத்து நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தாா்.