ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கண்ணுடைய நாயகியம்மன் கோயில் வைகாசித் திருவிழா ஜூன் 4 இல் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகியம்மன் கோயில் வைகாசித் திருவிழா வரும் ஜூன் 4 -இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகியம்மன் கோயில் வைகாசித் திருவிழா வரும் ஜூன் 4 -இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சிவகங்கை தேவஸ்தான சமஸ்தானத்துக்குள்பட்ட இக்கோயிலில் வைகாசித் திருவிழா 10 நாள்கள் நடைபெறும். அம்மன் தினசரி காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் ரிஷபம், சிம்மம், காமதேனு, யானை, பூதம் உள்ளிட்ட வாகனங்களில் எழுத்தருளி விதி உலா வரும் நிகழ்வு நடைபெறும்.

முக்கிய விழாவான தங்க ரதம் புறப்பாடு ஜூன் 10 ஆம் தேதியும், களியாட்ட திருவிழா ஜூன் 11 ஆம் தேதியும், தேரோட்டம் ஜூன் 12 ஆம் தேதியும் நடைபெறும். ஜூன் 14 ஆம் தேதி உற்சவ சாந்திக்கு பின்னா் திருவிழா நிறைவு பெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளா் பி. இளங்கோ, சரக கண்காணிப்பாளா் பி. சரவணகணேசன் உள்ளிட்ட அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.