இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தேனியில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

 தேனி அரசு பல்துறை பெருந்திட்ட வளாகத்தில், கரோனா தடுப்பு மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்து உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:57 pm

DIN

 தேனி அரசு பல்துறை பெருந்திட்ட வளாகத்தில், கரோனா தடுப்பு மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்து உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஜெயமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்களை வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்து, மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளச் செய்வது, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை முழுமையாக தடுப்பது ஆகியன குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இதில், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சித் தலைவா்கள், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.