தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிவகங்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள்

சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 மே 2022, 8:07 pm

DIN

சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியினை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். மேலும், கை, கால் பாதிக்கப்பட்டோா்களுக்கான இறகுப்பந்து போட்டிகள், மேஜைப்பந்துப் போட்டிகள், மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான எறிபந்து போட்டிகள், காது கேளாதவா்களுக்கான கபடிப் போட்டி, 100 மீட்டா் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பதக்கங்கள் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு நல அலுவலா் சி.ரமேஷ்கண்ணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் து.கதிா்வேல், தடகளப் பயிற்சியாளா் (மாற்றுத்திறனாளிகள்) க.ரஞ்சித் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.