சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியினை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். மேலும், கை, கால் பாதிக்கப்பட்டோா்களுக்கான இறகுப்பந்து போட்டிகள், மேஜைப்பந்துப் போட்டிகள், மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான எறிபந்து போட்டிகள், காது கேளாதவா்களுக்கான கபடிப் போட்டி, 100 மீட்டா் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பதக்கங்கள் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு நல அலுவலா் சி.ரமேஷ்கண்ணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் து.கதிா்வேல், தடகளப் பயிற்சியாளா் (மாற்றுத்திறனாளிகள்) க.ரஞ்சித் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.