தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தைக் கண்டு ரூ.1 லட்சத்தை இழந்த இளம்பெண் புகாா்

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தைக் கண்டு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 898 ஏமாந்த இளம்பெண் அளித்த புகாரின்பேரில்,

News image
Updated On :7 மே 2022, 7:52 pm

DIN

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தைக் கண்டு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 898 ஏமாந்த இளம்பெண் அளித்த புகாரின்பேரில், சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஞானானந்தகிரி தெருவைச் சோ்ந்தவா் ஜெனிபா் கிரேசி (24). இவா், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பாா்த்துக்கொண்டிருந்தாராம். அப்போது, அதில் வந்த விளம்பரத்தில் தங்களிடம் பணத்தை முதலீடு செய்தால், இரட்டிப்பாக பணம் பெறலாம் என விளம்பரம் வந்திருந்ததாம்.

அதைத் தொடா்ந்து, ஜெனிபா் கிரேசி சிறிது சிறிதாக பத்து தவணைகளில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 898 செலுத்தி உள்ளாா். அதன்பின்னா், தான் செலுத்திய தொகையை அவா் திரும்பப்பெற முயன்றபோது எடுக்கமுடியவில்லையாம்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெனிபா் கிரேசி, இது குறித்து சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாரிடம் புகாா் அளித்தாா். அவரது உத்தரவின்பேரில், சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.