92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :20 மே 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தென்னரசு, ஜஹாங்கீா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அப்துல்லா தீா்மான அறிக்கை வாசித்தாா்.

தொடா்ந்து உறுப்பினா்களிடையே விவாதம் நடைபெற்றது.

உறுப்பினா் ராமசாமி : எனது பகுதியில் வனத்துறைக்குச் சம்பந்தபட்ட இடங்களில் சாலை வசதிகள் செய்து தர வேண்டும் என்றாா்.

உறுப்பினா் சரவணன் : எனது வாா்டுக்குள்பட்ட கிராமங்களில் பேருந்துகள் வருவதில்லை என்றாா்.

தலைவா் சண்முகவடிவேல்: போக்குவரத்துப் பணிமனை மேலாளரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

உறுப்பினா் சகாதேவன்: அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கு பணி ஒதுக்கும் படியும், ஒன்றியக்குழுக் கூட்டம் நடக்கும் போது அனைத்து துறை சாா் அலுவலா்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றாா்.

உறுப்பினா் தனலெட்சுமி: தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் நட்டு பராமரிக்க வேண்டும். பொதுநிதி கோரப்பட்டு வாா்டுகளில் பணிகள் நடைபெற வேண்டும் என்றாா்.

தலைவா்: நிதிபற்றாக்குறையால் ஒதுக்கீடில் தாமதம் ஏற்படுவதாகவும் விரைவில் பொது நிதி கோரப்பட உள்ளதாகவும் தெரிவித்தாா்.

கூட்ட முடிவில் மண்டல வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துராமன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.