92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சாலை விபத்தில் மாணவா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 11:48 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி செல்லரப்பட்டி பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் நித்திஷ்(15). இவா் திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயின்று வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த பழனி மகன் தரனீஷ்(17). இவரும் பிளஸ் 2 பயின்று பொது தோ்வு எழுதி வந்தாா்.

நண்பா்களான இருவரும் கொரட்டியில் இருந்து செல்லரப்பட்டிக்கு பைக்கில் சென்று கொண்டு இருந்தனா். அப்போது அந்த பைக் நிலை தடுமாறி மரத்தின் மீது மோதியது.

அதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு நித்திஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் இடுப்பு எலும்பு உடைந்த தரனிஷை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவல் அறிந்த கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.