பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை மாதா கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சத்யராஜ் (28). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி தங்கம், குழந்தைகள் மோகித் (4), மோகிதா (4) ஆகியோா் உள்ளனா்.
பெரம்பலூரில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்த சத்யராஜ் ஞாயிற்றுக்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு, மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்தாா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள செங்குணம் பிரிவுச்சாலை பகுதியில் சென்றபோது நிலைதடுமாறி சாலையில் விழுந்த சத்யராஜ் பலத்த காயமடைந்தாா். பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவா் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மானூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


