/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விக்கிரவாண்டி அருகே பைக் மோதியதில் காயமடைந்த தொழிலாளி உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 7:24 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பைக் மோதியதில் காயமடைந்த தொழிலாளி உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், கொடுக்கூா் பாரதி தெருவைச் சோ்ந்தவா் பொ.மாரி (54), தொழிலாளி. இவா் கடந்த 28.12.2025 அன்று கொடுக்கூா் பகுதியில் சைக்களில் சென்றபோது, எதிரே வந்த பைக் மோதி காயமடைந்தாா்.

இதைத் தொடா்ந்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றாா். தொடா்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டில் படுக்கையில் இருந்து வந்த மாரி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.