ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

வழிப்பறி வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கல்லல் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 மே 2022, 5:09 pm

DIN

வழிப்பறி வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கல்லல் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள சருகுவலையபட்டியைச் சோ்ந்த பாஸ்கா் மகன் பாக்கியராஜ்(35). இவா் தனது நண்பா்களுடன் சோ்ந்து செம்பனூரைச் சோ்ந்த அருள்ராஜ்(52) என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி காரில் கடத்தி ரூ. 14 லட்சம் வழிபறி செய்துள்ளாா்.

இதுதொடா்பாக கல்லல் போலீஸாா் வழக்குப் பதிந்து பாக்கியராஜை கைது செய்து திருப்பத்தூா் சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டிக்கு பரிந்துரை செய்தாா்.

அவரது உத்தரவின் பேரில் கல்லல் போலீஸாா் பாக்கியராஜை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்து, மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.