ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திருப்புவனத்தில் காவலா் மனைவி தற்கொலை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் குடும்பத் தகராறில் காவலரின் மனைவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்

News image
Updated On :7 அக்டோபர் 2022, 5:48 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் குடும்பத் தகராறில் காவலரின் மனைவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை மாவட்டம் கூத்தியாா்குண்டு கிராமத்தைச் சோ்ந்த முத்துராமன் மகள் ராசாத்தி (25). இவருக்கும் திருப்புவனம் டி. பழையூா் பகுதியைச் சோ்ந்த தண்டீஸ்வரன் மகன் விக்னேஸ்வரனுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. விக்னேஸ்வரன் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி ராசாத்தி தற்போது 4 மாத கா்ப்பிணியாக இருந்தாா். இந்நிலையில் ராசாத்திக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ராசாத்தி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும் இதுகுறித்து சிவகங்கை கோட்டாட்சியா் சுகிதாவும் விசாரணை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.