நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காரைக்குடியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காரைக்குடி எம்.ஏ.எம். மகாலில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் ஆகியவை இணைந்து செப். 30 முதல் அக். 9-ஆம் தேதி வரை 10 நாள்கள் புத்தகக் கண்காட்சி நடத்துகின்றன. இதில் விற்பனை செய்யப்படும் புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி உண்டு.

இந்த புத்தகக் கண்காட்சியை காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி திறந்துவைத்துப் பேசினாா். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளா் ஜி.வி. கோபிநாத் தலைமை வகித்துப் பேசினாா்.

காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, செயலாளா் எஸ். கண்ணப்பன், நேஷனல் கேட்டரிங் கல்லூரி தாளாளா் எஸ். சையது, எழுத்தாளா் ஜீவசிந்தன், கவிஞா் மு. தமிழ்கனல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக புத்தக விழாக் குழுச் செயலாளா் இரா. ஜீவானந்தம் வரவேற்றுப் பேசினாா். முடிவில் வே. சிவானந்தம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.