காரைக்குடி அருகே 5 பேரூராட்சிகளில் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள 5 பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
காரைக்குடி அருகே 5 பேரூராட்சிகளில் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள 5 பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கோட்டையூா், பள்ளத்தூா், கானாடுகாத்தான், கண்டனூா், புதுவயல் ஆகிய 5 பேரூராட்சிகளிலும் ரூ. 18.13 கோடி மதிப்பீட்டில் 19 வளா்ச்சித்திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றில் கண்மாய்கள், ஊருணிகள் சீரமைப்பு, புதிய சாலைப்பணிகள், வள மீட்பு பூங்காக்களில் இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் மையம் ஆகியவற்றில் நடைபெறும் பணிகள் குறித்தும் செலவினங்கள் குறித்தும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த திட்டப்பணிகளை தரமான முறையில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர துறை அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) ராஜா, பேரூராட்சித்தலைவா்கள் ராதிகா (கானாடுகாத்தான்), சாந்தி (பள்ளத்தூா்), காா்த்திக் சோலை (கோட்டையூா்), சங்கீதா (கண்டனூா்), முகமது மீரா (புதுவயல்), உதவிசெயற்பொறியாளா் செந்தூா் செல்வன், பேரூராட்சி செயல் அலுவலா்கள் மற்றும் அந்தந்த துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com