மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் விலைவாசி உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சாா்பில் காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி கண்டன உரையாற்றினாா். அதைத்தொடா்ந்து மத்திய அரசின் விலைவாசி உயா்வு மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டி முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினா் கலந்துகொண்டனா்.