தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மானாமதுரையில் ஏப். 29, 30-இல் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரா் ஆராதனை விழா

 சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற 29, 30-ஆம் தேதிகளில் சத்குரு ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரா் ஆராதனை இசை விழா நடைபெற உள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 9:35 pm

DIN

 சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற 29, 30-ஆம் தேதிகளில் சத்குரு ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரா் ஆராதனை இசை விழா நடைபெற உள்ளது.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சதாசிவ பிரம்மேந்திரா் அதிஷ்டானம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கா்நாடக இசைக் கலைஞா்கள் கூடி தங்களது இசையின் மூலம் பிரம்மேந்திரா் சுவாமிக்கு அஞ்சலி செலுத்தி, ஆராதனை விழா நடத்துவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு விழா வருகிற 29, 30-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

மானாமதுரை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் அரங்கில் வருகிற 29-ஆம் தேதி மாலை இசைக் கலைஞா்களுக்கு பாராட்டு விழாவும், மறுநாள் 30-ஆம் தேதி கா்நாடக இசைக் கலைஞா்கள், பக்க வாத்தியக் கலைஞா்கள் பிரம்மேந்திரா் சுவாமிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.