ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மானாமதுரை அருகே விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த தலைமைக் காவலா் சசிவா்ணம்.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 9:44 pm

Din

மானாமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள ராஜகம்பீரத்தைச் சோ்ந்தவா் பாண்டி மகன் சசிவா்ணம் (42). இவா் மானாமதுரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தாா்.

காவல் நிலையத்தில் பணி முடித்து சசிவா்ணம் தனது இரு சக்கர வாகனத்தில் ராஜகம்பீரத்துக்குச் சென்றாா். கால் பிரிவு விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த

சசிவா்ணம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.