நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கீழடி அகழாய்வில் செப்புப் பொருள்கள்

கீழடி அகழாய்வில் செப்புப் பொருள்கள்

News image

கீழடி அகழாய்வுத் தளத்தில் உடைந்த நிலையில் துண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்ட பச்சை வண்ண செப்புப் பொருள்கள்.

Updated On :3 ஜூலை 2024, 7:16 pm

Din

திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் நடைபெற்றுவரும் 10- ஆம் கட்ட அகழாய்வின் போது உடைந்த நிலையில் பச்சை வண்ண செப்புப் பொருள்கள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வுத் தளத்தில் கடந்த மாதம் 18 -ஆம் தேதி 10- ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இதற்காக தோண்டப்பட்ட இரு குழிகளிலிருந்து ஏற்கெனவே கண்ணாடி பாசி மணிகள், தா எனும் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், மற்றொரு அகழாய்வுக் குழியிலிருந்து நான்கு அடி ஆழத்தில் உடைந்த பச்சை வண்ண செப்புப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. 8 துண்டுகளாகக் கிடைத்துள்ள இந்த செப்புப் பொருள்களில் ஒன்று பெரியதாகவும், மற்றவை சிறியதாகவும் உள்ளன. சில செப்புப் பொருள்களில் பச்சை வண்ணம் தெளிவாகத் தெரிகிறது.

இதுகுறித்து கீழடி அகழாய்வு இயக்குநா் ரமேஷ், இணை இயக்குநா் அஜய்குமாா் கூறியதாவது: தற்போது கண்டெடுக்கப்பட்ட செப்புப் பொருள்கள் ஆய்வுக்கு பின்னரே எந்த மாதிரியானவை என்பது தெரியவரும் என்றனா்.

Story image